Wednesday, December 30, 2009

தொழில்நுட்ப நிறுவனங்களின் பெயர் வந்த காரணங்கள்

தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங்கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார்த்திருப்போமா! இதோ இப்போது பார்ப்போமா!

அடோப் (ADOBE)

இந்த பெயர் ஒரு நதியின் பெயர். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களின் ஒருவரான ஜான் வார்நாக் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார். இவரின் வீட்டிற்குப் பின்புறம் இந்த அடோப் நதி ஓடுகிறது.

ஆப்பிள் (APPLE)

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் இலச்சினை வாசகம் என்ன தெரியுமா! – "Bite into an Apple" என்பதுதான். இதுதான் இந்நிறுவனத்தின் ஸ்லோகன் ஆக இருந்தது. ஆனால் இந்நிறுவனத்தின் மிகப் புகழ் பெற்ற ஸ்லோகன் "Think Different" என்பதே. எனவே இரண்டையும் கலந்து, வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் நிறுவனத்தை ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என வைத்திருக்க வேண்டும். ஜாப்ஸ் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஆப்பிள்களை உற்பத்தி செய்திடும் பண்ணையில் முதலில் வேலை பார்த்து வந்தாராம். அவர் நண்பர்களுடன் தன் புதிய கம்ப்யூட்டர் கம்பெனிக்குச் சரியான பெயரை அவரின் நண்பர்கள் தரவில்லை என்றால் கம்பெனிக்கு ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்று பெயர் வைத்து விடுவேன் என்று செல்லமாகவும் வேடிக்கைக்காகவும் மிரட்டி உள்ளார். ஆனால் அவரின் நண்பர்களால் வேறு எந்த மிக நல்ல பெயரையும் கொடுக்காத நிலையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்பதே பெயரானது. அதுவே சரித்திரத்திலும் நிலைத்துவிட்டது என்பது நாம் அறிந்த வரலாறு.

கூகுள் (GOOGLE)

சர்ச் இஞ்சின் கொண்ட நிறுவனத்தை நிறுவிய போது, இதில் தேடப்படும் தகவல்களின் எண்ணிக்கை 1 போட்டு அதன் பின் 100 சைபர்கள் கொண்ட எண்ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் "Googol" என்ற சொல்லை முதலில் வைத்தனர். இந்த சொல் நம் ஊர் லட்சம், கோடி என்பது போல, மேலே சொன்ன எண்ணைக் குறிக்குமாம். ஆனால் இந்த சொல்லை எழுதுகையில் அதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட நமக்கு "Google" என்ற பெயர் கிடைத்தது. அது கூட இந்நிறுவனத்தை ஏற்படுத்தியவர்களால் ஏற்படுத்தப்பட வில்லை. ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்த செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரால் தான் கூகுள் தொடங்கப்பட்டது. இவர்கள் இதனைத் தொடங்குவதற்கான ப்ராஜக்ட் ரிப்போர்ட்டினைத் தயாரித்து, ஒரு முதலீட்டாளரிடம் கொடுத்து நிதி உதவி கேட்டுள்ளனர். அவர் நிதி உதவி வழங்குகையில் தந்த செக்கில் "Google"" எனத் தவறாக எழுதப்போய், தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டாம் என இருவரும் நினைத்து அந்த தவறான ஸ்பெல்லிங்குடனே நிறுவனத்தைத் தொடங்கி இன்று மனித இனத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றிவிட்டனர்.

ஹாட் மெயில் (HOTMAIL)

இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் ஜாக் ஸ்மித். இணையம் வழியாக இமெயில்களைப் பெறும் வழி குறித்து முதலில் யோசித்துள்ளார். அதாவது இணைய இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் துணையின்றி, அவர்கள் சர்வரில் இடம் கேட்டு வாங்கி, இமெயில் பெறும் பழக்கத்தை மாற்றி வெப் சர்வரை அடைந்து மெயிலைப் பெறும் வழி குறித்துப் பல காலம் சிந்தித்து ஹாட்மெயிலை வடிவமைத்தார். ஹாட் மெயிலின் இன்னொரு நிறுவனரான, இந்தியரான, சபீர் பாட்டியா இதற்குப் பல பெயர்களை எழுதிப் பார்த்தார். எந்த பெயராக இருந்தாலும் அது மெயில் (MAIL) என முடிய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். இறுதியாக HOTMAIL என்ற பெயரே போதும் என முடிவுக்கு வந்தார். ஏனென்றால் இணையத்தில் வெப் பக்கங்களில் பயன்படுத்தப்படும் புரோகிராமிங் மொழியினை HTML Hyper Text Markup Language என அழைக்கிறோம். HOTMAIL என்பதில் HTML இருப்பதால் அதுவே இருக்கட்டும் என முடிவு செய்து ஹாட் மெயில் என அழைத்தார். 1996 ஜூலை 4ல் இது அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் இது HoTMaiL என சின்ன எழுத்தும் குறிப்பிட்ட சில பெரிய எழுத்துமாக அமைக்கப்பட்டே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின் நாளில் இது வழக்கமாக எழுதும் முறையில் அமைக்கப்பட்டது.

இன்டெல் (INTEL)

இந்த நிறுவனத்தை நிறுவியவர்கள் பாப் நாய்ஸ் மற்றும் கார்டன் மூர் (Bob Noyce and Gordon Moore) என்பவர்களாவர். அவர்கள் தங்களின் புதிய நிறுவனத்தை "Moore Noyce" என அழைக்க முதலில் முடிவு செய்தனர். ஆனால் பின்னர் பார்க்கையில் இந்த பெயர் ஹோட்டல்கள் பல அடங்கிய ஒரு குரூப்பிற்கு இருப்பது தெரியவந்தது. அந்த பெயர் அந்த நிறுவனத்தால் பதியப்பட்டது தெரியவந்ததால் வேறு பெயரைச் சிந்திக்கத் தொடங்கினார்கள். அப்போது to ‘more noise’ என இருக்கட்டுமே என்று யோசித்தனர். ஆனால் ஒரு செமி கண்டக்டர் நிறுவனத்திற்கு இந்தப் பெயர் தவறான பொருளைத் தரும் என தவிர்த்துவிட்டனர். பின் முதல் ஓராண்டிற்கு NM Electronics என்ற பெயரைப் பயன்படுத்தினர். அதன் பின் INTegrated Electronics என்ற பெயரைச் சுருக்கி NTEL எனப் பெயர் வைத்தனர். அப்படியே அந்தப் பெயர் இன்றளவும் உலகில் புகழ் பெற்ற ஒரு பெயராக இருந்து வருகிறது.

மைக்ரோசாப்ட் (MICROSOFT)

பில் கேட்ஸின் இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் எனப் பெயர் பெற்ற நிகழ்ச்சி மிகச் சாதாரணமான ஒன்றாகும். Microcomputer மற்றும் Software என்ற இரண்டையும் இணைத்து இந்த பெயர் உருவாக்கப்பட்டது. முதலில் பில் கேட்ஸ் தன் சகா பால் ஆலன் என்பவருக்கு 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ல் எழுதிய கடிதத்தில் MicroSoft எனப் பிரித்து இடைக் கோடிட்டு எழுதினாராம். அதன் பின் இருவரும் சேர்ந்து தங்கள் நிறுவனத்திற்கு இன்றைய பெயரை 1976 நவம்பர் 26ல் பதிவு செய்திருக்கின்றனர். இடையே இருந்த இடைக்கோடு காலப்போக்கில் நீக்கப்பட்டு MICROSOFT என ஒரே பெயராகப் பின்னர் உருவானது. அதுவே உலக மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நிறுவனத்தின் பெயராக அமைந்தது.

யாஹூ (YAHOO)

தொடக் கத்தில் இந்த நிறுவனத்தின் பெயர் "Jerry and David’s Guide to the World Wide Web" என்பதாக இருந்தது. 1994ல் யாஹூ என்ற பெயருக்கு மாறியது. ஜொனதன் ஸ்விப்ட் என்பவர் எழுதிய கல்லிவரின் பயணங்கள் என்ற நாவலில் "Yet Another Hierarchical Officious Oracle" என்ற சொல் தொடரின் சுருக்கமாக YAHOO என்பதைப் பயன்படுத்தினார். இந்த பெயர் மிக முரட்டுத்தனமான, நாகரிகம் மற்றும் பண்பாடு தெரியாத இளைஞனைக் குறிக்கும். யாஹூ நிறுவனத்தைத் தொடங்கிய ஜெர்ரியங் மற்றும்டேவிட் பைலோ ஆகிய இருவரும் தாங்கள் அப்படிப்பட்ட இளைஞர்கள் என்று தங்களைத் தாங்களே வேடிக்கையாகக் குறிப்பிட்டுக் கொண்டு இந்த பெயரையே தங்கள் நிறுவனத்திற்கும் தேர்ந்தெடுத்தனர்.

ஈ-மெயில் அனுப்பினால் பணம் வருமா???

இமெயில் உலகில் எத்தனை வகை வகையான மெயில்கள் நமக்கு நாம் விரும்பாமலே கிடைக்கின்றன. பார்வேர்ட் செய்திடச் சொல்லி ஒரு சில இமெயில்கள் நம்மைக் கட்டாயப்படுத்தும். இந்த மெயிலைப் பார்வேர்ட் செய்தால் போற வழிக்குப் புண்ணியம் என்று ஒரு சில வரும்.

ஒரு சில மெயில்கள் இது கடவுள் காரியம்; பார்வேர்ட் செய்யாவிட்டால் பாவம் என்று எச்சரிக்கும். நீங்களும் மெனக்கெட்டு உங்கள் நண்பர் ஒவ்வொருவருக்கும் அனுப்புவீர்கள். சென்ற வாரம் எனக்கொரு மெயில் வந்தது. ஒரு குழந்தைக்குத் தீராத நோய் என்று சொல்லி அக்குழந்தையின் குடும்பத்தின் ஏழ்மை குறித்து ஒரு சிறிய விளக்கம். பின் ஒருவர் அந்தக் குழந்தைக்காக எழுதியதாக ஒரு கவிதை. அதன்பின் இந்த மெயிலை ஜஸ்ட் பார்வேர்ட் செய்திடுங்கள். யாராவது பார்த்து பணம் அனுப்புவார்கள். அந்த பணம் அக்குழந்தைக்கு உதவுகையில் உங்களுக்கு கூகுள் நிறுவனம் பணம் கொடுக்கும் என்று எழுதப்பட்டிருக்கும்.

இது போன்று வரும் கடிதங்கள் அனைத்துமே பொழுது போகாதவன் யாராவது செய்திடும் இன்டர்நெட் சில்மிஷங்கள். இதில் எதுவும் உண்மை இருக்காது. எந்த நிறுவனமும் அனைத்து இமெயில்களையும் தேடி யாருக்கும் பணம் அனுப்ப முடியாது. எனவே இது போன்ற இமெயில்கள் வந்தால் தொடர்ந்து அனுப்பும் வேலையை மேற்கொள்ளாதீர்கள். சரி, உண்மையிலேயே நல்ல விஷயம் குறித்த இமெயில் வந்தால் என்ன செய்வது? அது அந்தக் கடிதத்திலேயே தெரிந்துவிடும். உங்களுக்கு உற்ற நண்பர்கள் என்றால் அதன் உண்மை தெரிய இன்னொரு இமெயில் அனுப்பிக் கேட்கலாம். அல்லது www.snopes.com என்ற தளத்திற்குச் சென்று உங்கள் இமெயில் குறித்த சில சொற்களை அமைத்து தேடினால் தற்போது இது போல வரும் இமெயில்கள் குறித்த பட்டியலைத் தரும்.

நான் தேடிய போது கிடைத்த சுவாரஸ்யமான பரிசுகள்.

இந்த இமெயில் 2 லட்சம் பேருக்கு அனுப்பப்படுகையில் அனைவருக்கும் ஒரு பீர் பாட்டில் பரிசு.

குறைந்தது 11 பேருக்கு அனுப்பு; இல்லையேல் உனது கூகுள் இமெயில் முடக்கப்படும்.

இந்த மெயிலை அனுப்பும் 1000 ஆவது ஆளாக நீங்கள் இருந்தால் டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் இருவருக்கு இலவச டிக்கெட்.

மனித மாமிசம் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வராது. உங்கள் நண்பர்களுக்கு மட்டும் இதனைத் தெரிவியுங்கள். இந்த விஞ்ஞானி எழுதியுள்ளார்.

இப்படியே அடுக்கிக் கொண்டு போகிறது. இதனைப் படித்தாலே இவை அனைத்தும் எவ்வளவு பெரிய மோசடி என்று தெரியும். எனவே அடுத்த முறை ஏதாவது ஒரு இமெயிலை தொடர்ந்து பார்வேர்ட் செய் என மெயில் வந்தால் உடனே அதனை அழித்துவிடுங்கள்.

பைல்களை எளிதாகக் கையாள பிரீ கமாண்டர்

மிகச் சிறிய அளவில் பைல்களைப் பயனுள்ள வகையில் கையாள நமக்குக் கிடைக்கும் புரோகிராம் பிரீ கமாண்டர் (Free Commander) நாம் பைல்களை காப்பி செய்திட, இன்னொரு இடத்திற்கு நகர்த்திட விண்டோஸ் எக்ஸ்புளோரரையே நாடுகிறோம். இது பைல்களைக் கையாள ஒரு விண்டோ மட்டுமே காட்டுகிறது.

ஒரு டிரைவிலிருந்து இன்னொரு டிரைவில் உள்ள போல்டருக்கு பைல்களை இழுத்துப் போட வேண்டும் என்றால் இன்னொரு முறை விண்டோஸ் எக்ஸ்புளோரரை இயக்கி விண்டோ ஒன்றைக் கூடுதலாகத் திறக்க வேண்டும். இந்த பிரச்னையை பிரீ கமாண்டர் தீர்த்துவைக்கிறது.

அருகருகே இரண்டு விண்டோக்களைத் திறந்து வைத்து பைல்களைக் காட்டுகிறது. இதனால் பைல் பரிமாற்றத்தினை மிக எளிதாக மேற்கொள்ளலாம். இந்த புரோகிராமில் இன்னொரு பயனும் உண்டு. இதனை உங்கள் பிளாஷ் டிரைவில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இன்ஸ்டால் செய்த பென் டிரைவினை இன்னொரு கம்ப்யூட்டரில் பயன்படுத்துகையில் இந்த புரோகிராமினை இயக்கி பைல்களை முன்பு கூறியது போல எளிதாகக் கையாளலாம்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

பாதுகாப்பான பிரவுசர் எது...???

ஸ்விஸ் கம்ப்யூட்டர் இஞ்சினியரிங் அண்ட் நெட்வொர்க்ஸ் லேபரட்டரி நிறுவனம் ஐ.பி.எம். மற்றும் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து 18 மாதங்கள் ஓர் ஆய்வினை மேற்கொண்டது. இறுதியாக எடுத்த முடிவுகள் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தாலும் ஆம், முடிவுகள் கூறுவது உண்மையே என்று ஒத்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்டர்நெட் பிரவுசிங் மேற்கொள்கையில் நாம் பலமுனை தாக்குதல்களுக்கு ஆளாகிறோம். வைரஸ் மற்றும் நம் கம்ப்யூட்டரைக் கைப்பற்றும் புரோகிராம்கள், பிரவுசர் புரோகிராமில் ஏதாவது ஒரு பிழை உள்ள இடத்தைக் கண்டுபிடித்து நுழைந்துவிடுகின்றன. இதனால் பிரவுசர்களை வழங்கியவர்கள் தொடர்ந்து பேட்ச் பைல்களை அமைத்துத் தந்து கொண்டிருக்கின்றனர்.

இவற்றை டவுண்லோட் செய்து பிரவுசரில் இணைத்துக் கொண்டால்தான் நாம் புதிய வைரஸ்களிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். அப்படி அப்டேட் ஆக்கிக் கொள்ள வில்லை என்றால் நாம் பாதுகாப்பற்ற இன்டர்நெட் பிரவுசிங்தான் மேற் கொள்கிறோம். இந்த நோக்கில்தான் மேலே குறிப்பிட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்பாடுதான் பாதுகாப்பானது என்று கண்டறிந்துள்ளனர். இதோ அந்த ஆய்வு தந்த தகவல்கள். பயர்பாக்ஸ் பயன்படுத்துபவர்களில் 83% பேர் பேட்ச் பைல்களுடன் தங்களை அப்டேட் செய்து கொண்டுள்ளனர். சபாரி பிரவுசர் பயன் படுத்துபவர்களில் 65.3%, ஆப்பரா – 56.1%, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் – 47.6% மட்டுமே பேட்ச் பைல்களுடன் அப்டேட் செய்துள்ளனர். அனைத்து பிரவுசர்களுமே அவ்வப்போது வரும் ஆபத்துகளின் அடிப்படையில் உடனடியாக பேட்ச் பைல்களைத் தங்கள் இணைய தளங்களில் இலவசமாகத் தரும் பழக்கத்தினை மேற்கொண்டுள்ளனர்.



பிரவுசர் பேட்சிங் என்பது இன்றைய இணையப் பழக்கத்தில் இன்றியமையாத ஒரு செயல்பாடாக மாறிவிட்டது. இந்த ஆய்வு இன்னொரு உண்மையையும் கண்டறிந்துள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு பயன்படுத்துவோர் தங்கள் பிரவுசர்களை அப்டேட் செய்வதில் சோம்பேறிகளாக உள்ளனர். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் பதிப்பு 7 வெளியாகி 19 மாதங்கள் கழிந்தும் 52.5% பேரே தங்கள் பிரவுசரை அப்டேட்செய்துள்ளனர். ஆனால் பயர்பாக்ஸ் பயன்படுத்துபவர்களில் 92.2% பேர் அப்டேட் செய்துள்ளனர். இந்த ஆய்வு மேற்கொண்டவர்கள் சில பரிந்துரைகளையும் அளித்துள்ளனர்.

பிரவுசர் தொகுப்பு வழங்குபவர்கள் இந்த தேதி வரையே இது பாது காப்பானது என்று முத்திரை குத்தி அதனை அந்த நாளுக்கு முன் பயன் படுத்துபவருக்கு எச்சரிக்கையாகத் தர வேண்டும். இன்டர்நெட்டில் பயன்படுத்துபவர் இருக்கையில் அந்த பிரவுசர் தானாகத் தன்னை அப்டேட் செய்து கொள்ளும் வசதி இருக்க வேண்டும். மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் மாதம் ஒருமுறை மட்டும் முதல் செவ்வாய்க்கிழமை அப்டேட் செய்வதனைக் குறை கூறியுள்ளனர். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன் படுத்தாத நிலையிலும் அது அப்டேட் செய்யப்படுகிறது. மேலும் ஒரு மாத கால இடைவெளி என்பது மிகவும் அதிகம் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்???


சில வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும்.

சில வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy," it says. "Enter to return to Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications." என்ற செய்தி கிடைக்கும்.

இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.

ஹார்ட்வேர் பிரச்னை

கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் குறைந்த பட்சம் 16 இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start => Settings => Control pannel => System => Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.

ரம் மெமரி சிப்ஸ்

ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.

ஹார்ட் டிஸ்க் டிரைவ்

பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.

வீடியோ கார்ட்

சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளேயின் ரெசல்யூசனைக் குறைக்கவும். StartSettingsControl PanelDisplaySettings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.

வைரஸ்

பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.

பிரிண்டர்

பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.

சாப்ட்வேர்

முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர்பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.

அதிக வெப்பம்

இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கும் வகையில், சிபியு செட் செய்யப்பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.

மின் ஓட்டம்

கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும் சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே சரியான யு.பி.எஸ். மற்றும் சர்ஜ் புரடக்டர் கொண்டு இதனைத் தவிர்க்கவும்.

Tuesday, December 29, 2009

2009 தந்த சிறந்த பத்து இலவச புரோகிராம்கள்


சென்ற ஆண்டில் பல நூற்றுக்கணக்கான பயன்பாட்டு புரோகிராம்கள் இணையத்தில் புதிதாய்க் கிடைத்தன. பலவகையான பிரிவுகளில் இவை இருந்தன. மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றைத் தேடிப்பிடித்து டவுண்லோட் செய்து பயன்படுத்தினர்.

இருப்பினும் சில புரோகிராம்கள் அனைவருக்கும் தேவையானதாய் இருந்தன. மிக அதிக எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்டதன் அடிப்படையில் கீழே உள்ள புரோகிராம்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் ஏதேனும் உங்களுக்குத் தேவையானதாக இருந்தால் இப்போதும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.

1. விண்டோஸ் 7

ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் விண்டோஸ், 2009ஆம் ஆண்டு பலநிலைகளில் மக்களைச் சென்றடைந்தது. ஏதாவது ஒரு வகையில் மிக அதிக எண்ணிக்கையில் டவுண்லோட் ஆன புரோகிராம் ஆக விண்டோஸ் 7 பதிப்பு இருந்தது. சோதனைப் பதிப்பாக பல நிலைகளிலும், இறுதிச் சோதனைப் பதிப்பாகவும் இது மக்களைச் சென்றடைந்தது. முதலில் ஜனவரியில் இதன் சோதனைத் தொகுப்பு கிடைத்தது. ஆனால் இதில் நிறைய பிரச்சினைகள் இருந்தன. எனவே உடனே திரும்பப் பெறப்பட்டது; மீண்டும் தரப்பட்டது.

அதிகமான எண்ணிக்கையில் மக்கள் இதனை டவுண்லோட் செய்திட முயற்சித்ததில் பிரச்சினை ஏற்பட்டு இதன் காலக் கெடு நீட்டிக்கப்பட்டது.அடுத்து மே மாதம் இதன் இறுதிச் சோதனை பதிப்பு தரப்பட்டது . இந்த விண்டோஸ் 7 சோதனைப் பதிப்பு தந்த அழகான தீம்களை மக்கள் டவுண்லோட் செய்து பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

2. போர்ட்டபிள் உபுண்டு லினக்ஸ் (Portable Ubuntu for Windows)

லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்ந்து தன் ஆதரவாளர் எண்ணிக்கையைச் சென்ற ஆண்டில் உயர்த்தியது. இதனால் பல்வேறு பதிப்புகள் வெளியாயின. இவற்றில் அதிகம் டவுண்லோட் செய்யப்பட்ட சிஸ்டம் பைல் உபுண்டு லினக்ஸ் போர்ட்டபிள் எடிஷனாகும். கீழே உள்ள தளத்தில் இருந்து போர்ட்டபிள் எடிஷன் மிக அதிகமாக இறக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. விண்டோஸ் டெஸ்க்டாப்பிலேயே இதனைப் பயன்படுத்தலாம் என்ற வசதிதான் இதன் அடிப்படைக் காரணமாக இருந்தது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

3. செவன் ரீமிக்ஸ் எக்ஸ்பி (Seven Remix XP)

விண்டோஸ் 7 பதிப்பு வெளியானவுடன், பலர் தங்களுக்கும் அந்த அனுபவம் வேண்டும் என விரும்பினார்கள். ஆனால் அவர்களிடம் இருந்த கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் அதற்கு இடமளிக்கவில்லை. இருப்பினும் விண்டோஸ்7 அனுபவத்தினை எக்ஸ்பி சிஸ்டத்திலேயே பெற்றுக் கொள்ளும் வகையில் வெளியான புரோகிராம் பலரின் கவனத்தைக் கவர்ந்தது. அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் ஆன புரோகிராம்களில் இதுவும் ஒன்று.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

4. நினைட் (Ninite )

விண்டோஸ் 7 வந்ததனால் உருவான பல பயன்பாட்டு புரோகிராம்களில் இதுவும் ஒன்று. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கம்ப்யூட்டரில் மாற்றுகையில், ஏற்கனவே பயன்படுத்தி வந்த புரோகிராம்களையும் அதற்கான டிரைவர்களையும், மீண்டும் புதிய சிஸ்டத்தில் அமைப்பது பெரிய வேலையாக இருக்கும். மொத்தமாக அவற்றைத் தன்னிடத்தில் வாங்கிக் கொண்டுப் பின் புதிய சிஸ்டத்தில் அவற்றைச் சரியாகப் பதியும் வேலையை இந்த புரோகிராம் செய்கிறது. எத்தனை புரோகிராம்கள் இருந்தாலும் இதன் மூலம் மிக எளிதாக அவை அனைத்தையும் பதிந்துவிடலாம். எனவே தான் இது மிக அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்டது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

5. எக்ஸ்பி/விஸ்டாவில் விண்டோஸ் 7 ஷார்ட் கட்ஸ்

விண்டோஸ் 7 சிஸ்டம் வந்ததனால் ஏற்பட்ட இன்னொரு விளைவு இது. விண்டோஸ் 7 சிஸ்டம் தரும் ஷார்ட் கட் கீ தொகுப்புகள் ஏராளம். இதுவரை வந்த விண்டோஸ் சிஸ்டங்களில் உள்ள ஷார்ட் கட் கீகளைக் காட்டிலும் அதிகம். எனவே இவற்றைப் பயன்படுத்திப் பார்க்க விரும்பிய மக்களுக்காக இந்த புரோகிராம் வடிவமைத்துத் தரப்பட்டது. விண்டோஸ் 7 தரும் மிகச் சிறந்த ஷார்ட் கட் கீகளை, அதற்கு முன் வந்த விண்டோஸ் இயக்கங்களில் பயன்படுத்தும் வகையில் இந்த புரோகிராம் இயங்குகிறது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

6. ஏவிஜி இலவச ஆண்ட்டி வைரஸ்

வைரஸ்கள் நாளுக்கு நாள் பலவகைகளில் பெருகியதால், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலரும் நாடியது இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத்தான். அந்த வகையில் அதிகம் டவுண்ட்லோட் ஆன புரோகிராம் ஏவிஜி 9 ப்ரீ புரோகிராம் . இதில் பல கூடுதல் வசதிகள் தரப்பட்டது இதன் சிறப்பாகும். அதிகம் பிரபலமான இலவச ஆண்ட்டி வைரஸ் இது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

7. கூகுள் குரோம்

கூகுள் குரோம் பிரவுசர் வெளியாகி ஓராண்டு தான் ஆகியது. ஆனால் மிக அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்ட பிரவுசராக இது தொடக்கத்தில் இருந்தே இடம் பெற்றது. இதனை டவுண்லோட் பயன்படுத்திப் பார்த்தவர்கள் இதன் வேகத்தைப் புகழ்ந்தனர். ஆனால் தொடர்ந்து பயன்படுத்தாமல் மீண்டும் பழைய பிரவுசருக்கே சென்றவர்கள் ஏராளம். இரண்டாம் பதிப்பு மே மாதமும், குரோம் 3 செப்டம்பரிலும் வெளியாகின.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

8. பயர்பாக்ஸ் ( Fire fox)

பிரவுசர் மார்க்கெட்டில் தொடர்ந்து நிலையாக மக்களைக் கவரும் பிரவுசராக பயர்பாக்ஸ் எடுத்து வருகிறது. இதன் பயர்பாக்ஸ் பதிப்பு 3.5, 2009 ஆம் ஆண்டில் பிரபலம் அடைந்தது. டவுண்லோட் செய்யப்பட்டதிலும் சாதனை படைத்தது. இதன் சார்பாக வெளியான ஆட் ஆன் தொகுப்புகள் இதன் இயக்கத்திற்கு வலு சேர்த்தன. அந்த வகையில் டவுண்லோட் செய்யப்பட்ட ஆட் ஆன் தொகுப்புகளும் அதிகம்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

9. தண்டர்பேர்ட் 3 (Thunderbird 3)

மொஸில்லாவின் இன்னொரு மக்கள் அபிமான சாப்ட்வேர் இது. எளிமையான, பயன்படுத்த வேகமான இமெயில் கிளையண்ட் புரோகிராம் இது. இதன் பதிப்பு 3 அண்மையில் வெளியாகி அதிகமாக டவுண்லோட் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தண்டர்பேர்ட் பதிப்பு 2 வெளியானது. தற்போது வெளியாகியுள்ள பதிப்பு 3ல் பல புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

10. கம்ப்யூட்டர் ரிப்பேர் கிட் (Computer Repair Kit)

கம்ப்யூட்டரில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவும் புரோகிராம்களை இங்கு மொத்தமாக ஒரே புரோகிராமாகப் பெறலாம். இதன் பயன்தன்மை காரணமாகப் பலரால் டவுண்லோட் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும் அல்லது இங்கே கிளிக் செய்யவும்

உலகின் வியக்கவைக்கும் "வட துருவம்" - அழகிய புகைப்படங்கள்...




















2010 மைக்ரோசாப்ட்க்கு சவாலாக அமையுமா???

தொழில்நுட்ப வளர்ச்சியில் ஈடுபட்டு வர்த்தகத்தை மேற்கொண்டு இயங்கும் எந்த ஒரு நிறுவனமும், தொடர்ந்து சிக்கல்களையும் சவால்களையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கும். இந்த வகையில் உலகின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்ட் சவால்களைச் சந்தித்த வண்ணம் உள்ளது அனைவரும் அறிந்ததே.

2009 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தன் கட்டமைப்பில் பல சிக்கல்களை மைக்ரோசாப்ட் சந்தித்தது. இதன் பல பிரிவுகளில் அலுவலர்கள் வெளியே அனுப்பப்பட்டனர். இதன் காலாண்டு வருமானம் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் மிகவும் குறைவாக இருந்ததாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் ஆண்டின் இறுதியில் விண்டோஸ் 7 கை கொடுக்க, மைக்ரோசாப்ட் தலை நிமிர்ந்தது. சிஸ்டம் பொதுமக்களுக்கு வெளியாவதற்கு முன் வெளியிட்ட சோதனைத் தொகுப்புகளே இதன் இமேஜை நிமிர்த்தின. அக்டோபரில் விண்டோஸ் 7 வெளியானபோது மைக்ரோசாப்ட் உறுதியான தளத்தில் இருந்தது.

இதன் சர்ச் இஞ்சின் பிங் மிக அருமையான இலக்குகளை முன்வைத்து மற்றவற்றிலிருந்து மாறுபட்ட இயக்கத்தைக் கொடுத்து வெற்றி பெற்றது. இதன் வழி விளம்பர வருமானமும் இதற்குக் கை கொடுத்தது. இதன் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் வெளியான அஸூர் இன்னும் உறுதியான எதிர்காலத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வழங்கியது.

இருந்தாலும் மைக்ரோசாப்ட் போன்ற உலகளாவிய பெரிய நிறுவனம் மேலும் பல காரணங்களால் பாதிக்கப்படுவது இயற்கையே. உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மைக்ரோசாப்ட் தப்ப இயலவில்லை. தற்போது பன்னாட்டளவில் பொருளாதார நிலை சீரடைந்து வருவதால், 2010 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குத் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் ஆண்டாகத் தான் இருக்கும்.

மொபைல் பிரிவு

மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 6.5 மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம், இங்கும் தன் வலிமையை நிரூபித்து நிலைக்க முடியும் என்று எண்ணியது. ஆனால் அது எடுபடவில்லை. ஏற்கனவே உறுதியாக இயங்கிக் கொண்டிருக்கும் பல நிறுவனங்களுக்குப் போட்டியாக நுழைந்து வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் இழுப்பது, வெற்றி பெற முடியாத சவாலாகவே மைக்ரோசாப்ட் 2009ல் கண்டது.

ஆர்.ஐ.எம்., பால்ம், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களின் வெற்றி, வாடிக்கையாளர்கள் ஒரே நிறுவனத்திலிருந்து தங்கள் போன்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தியது. மைக்ரோசாப்ட் நிறுவனமும் ப்ராஜக்ட் பிங்க் என்ற பெயரில் தன் மொபைல் போன்களை தயாரிக்கும் திட்டம் ஒன்றை அறிவித்தது. அதில் ஸூன் சர்வீஸ் இணைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப் பட்டது. அப்படியானல் இன்னும் ஓராண்டு நாம் அதற்காகக் காத்திருக்க வேண்டும். ஐ போன்,பிளாக்பெரி, பால்ம் மற்றும் கூகுள் ஆண்ட்ராய்ட் ஆகியவற்றுடன், மொபைல் சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் போட்டியில் இயங்க முடியவில்லை. நல்ல ஒரு பார்ட்னர் நிறுவனத்துணையுடன் சாப்ட்வேர், சர்வீசஸ் ஆகிய இரண்டுடனும் இறங்கினால் தான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் மொபைல் சந்தையில் இயங்க முடியும். இல்லையேல் இந்தப் பிரிவை மறக்க வேண்டியதுதான்.

விண்டோஸ் 7

2007–09 ஆம் ஆண்டுகள் மைக்ரோசாப்ட்டிற்கு மிகுந்த சோதனையைக் கொடுத்தது. இதற்குக் காரணம் மக்களிடையே எடுபடாமல், பல பிரச்சினைகளை வாடிக்கையாளர் களுக்குக் கொடுத்து வந்த விண்டோஸ் விஸ்டா இயக்கத்தொகுப்பாகும். ஆனால் விண்டோஸ் 7 வந்தவுடன் அதில் விஸ்டாவின் இயக்கம் துளி கூட இல்லை என்ற செய்தியே கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு இனிப்பாக இருந்தது. தொடக்க விற்பனையும், விஸ்டா 7 குறித்து வந்த ஆய்வுக் குறிப்புகளும் மைக்ரோசாப்ட் நிலையைத் தூக்கி நிறுத்தியது. 2010ல் இந்த நிலையைத் தொடர்ந்து தக்க வைப்பதுதான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலையாய பணியாக இருக்கும்.

எம்.எஸ். ஆபீஸ்

மைக்ரோசாப் நிறுவனத்திற்கு, மற்ற எந்த சாப்ட்வேர் தொகுப்பினைக் காட்டிலும் அதிக வருமானம் தரும் தொகுப்பு அதன் ஆபீஸ் தொகுப்புதான். இலவசமாகக் கிடைக்கும் ஓப்பன் ஆபீஸ் மற்றும் ஸோஹோ தொகுப்புகள் ஆபீஸ் தொகுப்பிற்கு போட்டியா என்பது இன்னும் கேள்விக் குறிதான். சர்வர்களைக் கொண்டு அலுவலகப் பணிகளை இயக்கி வரும் பெரிய நிறுவனங்கள் தற்போது எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பைத்தான் விரும்புகின்றன. ஆனால் கூகுள் தற்போது மிக வேகமாகக் கொண்டு வரும் கிளவுட் கம்ப்யூட்டிங் அப்ளிகேஷன்கள், டேட்டா ஸ்டோரேஜ் போன்ற விஷயங்கள், மைக்ரோசாப்ட் நிலையைச் சற்று அசைத்துப் பார்க்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே அடுத்த 2010 ஜூனில் வெளியாக இருக்கும் ஆபீஸ் 2010 கூகுள் தரும் அப்ளிகேஷன்களைச் சமாளிக்க வேண்டியதிருக்கும். எனவே தன்னுடைய ஆபீஸ் தொகுப்பு எப்படி மற்றவற்றைக் காட்டிலும் சிறந்தது என்று காட்ட வேண்டிய சவாலை மைக்ரோசாப்ட் நிறுவனம் சந்திக்க வேண்டியதிருக்கும்.

பிங் சர்ச் இஞ்சின்

வரும் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் சர்ச் இஞ்சின் இலக்கு மிக எளிதான ஒன்றாக இருக்கும். விளம்பர வழி வருமானத்தைப் பெருக்குவதும், சர்ச் இஞ்சின் பிரிவில் பெரிய அளவில் இடம் பெறுவதும் ஆகும். தற்போது இந்தப் பிரிவில் 9.9% இடத்தை பிங் கொண்டுள்ளது. யாஹூவுடன் கொண்டுள்ள ஒப்பந்தம் மற்றும் பிங் தொடர்ந்து கொடுத்து வரும் புதிய வசதிகள் நிச்சயம் 2010 ஆம் ஆண்டில் இதனை உயரத்திற்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.

Wi-Fi தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்கள்!

"ஒயர்லெஸ் ஃபிடெலிடி" என்ற தொழில் நுட்பம்தான் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN)) என்று அழைக்கப்படும்நெட்வொர்க்குகளின் ஒரு சில வகைகள் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. அதாவது நெட்வொர்க்குகளுக்கும், கணினி, இணையதளஇணைப்புகளுக்குமான கம்பிவட தொழில் நுட்பத்திற்கு அடுத்தகட்டமாக இந்தகம்பியற்ற இணைப்புத் தொழில்நுட்பம் தற்போது வெகு வேகமாகபரவலாகிவருகிறது.

முறையான பாதுகாப்பு, தடுப்பு ஏற்பாடுகள் இல்லையெனில், Wi-Fi நெட்வொர்க்கை யார் வேண்டுமானாலும் அனுமதியின்றி பயன்படுத்தி எந்தவிதமான நாசவேளைகளிலும் ஈடுபடலாம் என்பதே தற்போது எழுந்துள்ள அச்சம்.

இந்தியா தற்போது
தகவல் தொடர்பியலில் புரட்சியை எதிகொண்டு வருகிறது. மிகப்பெரிய செல்பேசி சந்தையாக இந்தியா வளர்ந்து வரும் நிலையில் இந்ததொழில் நுட்பமும் இந்தியாவில் அதிக வளர்ச்சியை பெறும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வர்த்தகத் துறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், இதனால் மக்கள்வாழ்முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றால் கணினிகள், லேப்டாப்கள், அடுத்த தலைமுறை அதி தொழில் நுட்ப ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும்பிற கைவழி பயன்பாட்டு மின்னணுக் கருவிகளின் தேவை கணிசமாக பெருகிவருகிறது. இதனுடன் சேர்ந்து 24 மணி நேர இணைப்புச் சேவை, பரவலானவிரிவலை (பேண்ட்வித்) ஆகியவற்றிற்குமான தேவைகளும் கூடி வருகிறது.

இந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுக்ககூடிய ஒரு தொழில் நுட்பமான Wi-Fi தொழில்நுட்பம் தற்போது இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வீ
டுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில்விரும்பத்தகுந் ஒரு இணைப்புத் தொழில்நுட்பமாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது.

இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கிய Wi-Fi அலையன்ஸ் நிறுவனத்தின்கணிப்பின்படி தற்போது Wi-Fi தொழில் நுட்பத்திற்கான இந்திய சந்தை 270 மில்லியன் டாலர்கள். 2011-12ஆம் ண்டுவாக்கில் இது 900 மில்லியன் டாலர்கள்சந்தையாக வளர்ச்சியடையும்.

ஆனால்... இந்த தொழில் நுட்பம் பல பாதுகாப்பு கவலைகளையும், அச்சுறுத்தல்களையும் அளிக் துவங்கியுள்ளது. சமீபத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு குறித்து விசாரணை மேற்கொள்கையில், பாதுகாப்பு நிறுவனங்கள், இதற்கு காரணமா ரு மின்னஞ்சலை கண்டுபிடித்துள்ளது. அதனை பின்பற்றிச்செல்கையில் கென் ஹேவுட் என்ற அமெரிக்க குடிமகனின் கணினிக்குஇட்டுச் சென்றுள்ளது.

அதாவது அந்த அமெரிக்கக் குடிமகனின் கணினி ஹேக் செய்யப்பட்டு அதன்வழியாக இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், இந்த தொழில் நுட்பம்நம்மிடையே சில கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.


அதாவது சரியாக கண்காணிக்கவில்லையெனில், Wi-Fi நெட்வொர்க்கில் உள்ளகுறைபாடுகளினால் ஹேக்கர்கள் எந்த ஒரு கணினி நெட்வொர்க்கிலும் புகுந்துநாச வேலைகளில் ஈடுபடமுடியும். இதனால் இதன் பயனாளர்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய கட்டாயம் பிறந்துள்ளது .


இதற்காக, வெள்ளை அறிக்கை ஒன்றையும் மஹிந்திரா ஸ்பெசல் சர்வீசஸ்குழுமம் (MSSG) வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்: "சிறப்பான பாதுகாப்பு செயல்முறைகள் - Wi-Fi -யின் அபாயங்கள் என்று அந்தவெள்ளை அறிக்கை தலைப்பிடப்பட்டுள்ளது.

Wi-Fi தொழில் நுட்பத்தினால் இணையதளம் உள்ளிட்ட இணைப்புகளில்நடந்துள்ள புரட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல் வீடுகள் வரை அதன் மீது ஈர்ப்பை அதிகரித்துள்ளது. அதன் பயனும், திறனும் மற்ற கம்பிவட இணைப்பு நெட்வொர்க்குகளை விட அதிகமானது. ஆனால் இது எவ்வளவு பயனுள்ளதோந்த அளவிற்கு பாதுகாப்பு அபாயங்கள் நிறைந்தது. எனவே இந்த குறிப்புகள் சிறந்த தடுப்பு உத்திகளை மேற்கொள்ள பயனுள்ளதாக அமையும்.

கம்பியற்ற இணைப்பு ங்கள் நெட்வொர்க்கை அடைய ஒரு பின்வாசல் வழி!

ஒயர்லெஸ் ஆக்சஸ் கார்டுகளின் மூலம் இயங்கும் லேப் டாப்கள், தானியங்கி இணைப்பு அமைப்புகள் கியவை தற்போது பெருகி வருகிறது. அதாவது ஒயர்லெஸ் இணைப்பு பெற்றுள்ளவர்கள் தகவல்களை வான்வழியாக அனுப்புவதால், அதனை ஹேக் செய்வது சுலபம், அதாவது யார்வேன்டுமானாலும் அதனை பார்க்க முடியும். இதானல் ஹேக்கர்கள் எங்கிருந்தபடி வேண்டுமானாலும் நிறுவனங்களின் நெட்வொர்க்குகள் மட்டுமல்லாது ஒரு நாட்டின் பாதுகாப்பை தீர்மானிக்கும் ராணுவ சம்பந்தமான விஷயங்களையும் தகவல்களையும் வெளியிலிருந்தே அணுக முடியும்.


என்ன தவறு ஏற்பட முடியும்?

எதேச்சையாக அணுகுதல், அதாவது இதில் ஒரு பயனாளர் அடுத்ததாக உள்ளஒரு நிறுவனத்தின் ஊடுருவும் ஒயர்லெஸ் நெட்வொர்க் மூலம் ஒயர்லெஸ்அணுகல் புள்ளியைக் கைப்பற்றி அங்கிருந்து தகவல்களை திருடி என்னவேண்டுமானாலும் செய்யலாம்.

கெட்ட நோக்கத்துடன் அணுகுதல், இதில், ஹேக்கர்கள் ஒரு பொய்யானஅணுகல் இடங்களிலிருந்து தாங்கள் உருவாக்கிய ஒயர்லெஸ் கருவிகள் மூலம்எந்த ஒரு நெட்வொர்க்கையும் ஆட்கொண்டு, அதன் வழி செல்லும் தகவல்களைதிருடுவது.

தற்காலிக நெட்வொர்க்குகள், இதில் ஒயர்லெஸ் கணினிகளுக்கிடையே இணைப்பை ஏற்படுத்துவது, அதாவது ஒயர்லெஸ் அணுகல் இடம் என்ற ஒன்றுஇல்லாமலேயே.

உங்கள் ஒயர்லெஸ் அணுகல் புள்ளி ஒரு குறிப்பிட்ட பகுதியை பரவலாகக்கொண்டு யங்குவதால் நீங்கள் ஒயர் மூலம் அனுப்பும் செய்திகள் மற்றும்கார்ப்பரேட் தரவுகளை (datas) தொலைதூரத்திலிருந்தே அணுக முடிவது.

இதனைத் தடுக்க உடனடியாக செய்ய வேண்டியது என்ன?
  • ஒயர்லெஸ் கருவி அட்மினிஸ்ட்ரேட்டர் தான்தோன்றி கடவுச்சொல்லைஉடனடியாக மாற்றவும். உதாரணமாக ரீ செட் 123 அல்லது அது போன்ற பிறபொதுவான கடவுச்சொல் தானாகவே உங்கள் கணினியில் இருந்தால் அதனைஉடனடியாக மாற்றி வேறு கடவுச்சொல்லை வைக்கவும்.
  • உங்கள் ஒயர்லெஸ் கருவி பயன்படுத்தக்கூடிய WPA/WEP பாதுகாப்புகுறியேற்றங்களை எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்கவும்.

  • பயனில் இல்லாத போது Wi-Fi மீடியாவின் இயக்கத்தை நிறுத்தி வைப்பது நல்லது. அல்லது பிளக்கை பிடிங்கி வைப்பதும் சிறந்தது.

  • MAC முகவரி வடிக்கட்டி அமைப்பை ஏற்படுத்தி அதிகாரபூர்வ கருவிகளுக்குமட்டுமே இணைப்பை அனுமதிக்கவும்.

  • தானாகவே உள்ள சர்வீஸ் செட் ஐடென்டிஃபையர் (எஸ்.எஸ்..டி.) உடனடியாகமாற்றவும்.

  • தேவையில்லை என்றால் எஸ்.எஸ்..டி. ஒலிபரப்புகளை நிறுத்தி விடுங்கள்.
  • திறந்த Wi-Fi நெட்வொர்க்குகளை தானாகவே இணைக்கும் அமைப்பின்இயக்கத்தை நிறுத்தி வைக்கவேண்டும்.

  • உங்கள் ஒயர்லெஸ் பாதைகள் அனைத்திலும் ஃப்யர்வால்களை (Firewalls) உருவாக்கவும்.

  • உங்கள் வளாகத்தின் மையப்பகுதியில் உங்கள் ஒயர்லெஸ் அணுகள் இடத்தைவையுங்கள். சுவற்றிலோ மூலைகளிலோ வைத்தால் கசிவுகள் ஏற்படும்.

இந்த குறிப்புகள், தனிப்பட்ட பயனர்களுக்கு ஓரளவிற்கு பொருந்தகூடியது. நிறுவனஙளும், அமைப்புகளும் இதனை பரந்துபட்ட அளவில்மேற்கொள்ளவேண்டியிருக்கும். ஒரே படித்தான பாதுகாப்பு முறைகளை இவைகடைபிடிக்க வேண்டும்.

என்ன தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தாலும், அதனை உடைத்து உள் நுழையும்தொழில் நுட்பத்தை இந்த தொழில் நுட்பங்களிலிருந்தே கண்டுபிடித்துவிடமுடிகிறது என்பதே இதன் மையப் பிரச்சனை. என்று தணியும் இந்தவலைப்பின்னல் பாதுகாப்பு தாகம்?

இ-மெயிலில் அதிக எம்.பி.அளவுள்ள ஃபைல்களை அனுப்ப

-மெயிலில் அதிக எம்.பி. அளவுள்ள ஃபைல்களை அனுப்







-மெயிலில் ஃபைல்களை இணைத்து அனுப்ப அதிகபட்சமாக 20 எம்.பி தான்

அனுப்ப முடியும். ஆனால் இந்த சாப்ட்வேரில் அதிக பட்சமாக 100 எம்.பி வரை

எளிதாக அனுப்பிவைக்கலாம்.இந்த இ-மெயிலில் இலவச மாக மாதம் 500 எம்.பி

வரை பைல்களை அனுப்பி வைக்கலாம்.

பதினைந்து நாள் டிரையல் விஷனில் 3ஜி.பி. வரை பைல்களை அனுப்பலாம்.

ஒரு இ-மெயில் கணக்கில் மாதம் 500 எம்.பி.வரைதான் அனுப்ப முடியும்

என்பதால் உங்கள் தேவைக்கு ஏற்ப இரண்டு மூன்று இ-மெயில் கணக்கை

துவங்கி பைல்களை அனுப்பிவைக்கலாம்

முகவரி தளம்:-http://www.sendalong.com/index.html



இ-மெயில் அனுப்பி பாருங்கள். உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.


அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Monday, December 28, 2009

யூ-டியுப் தெரியும் , மணி டியுப்(Moneytube) தெரியுமா....

இணைய வழி பணம் பண்ண ஆயிரம் ஆயிரம் வழிகளை யோசித்து யோசித்து உருவாக்கி கொண்டேயிருக்கின்றார்கள்.

யூடியூப் (Youtube) எனும் வீடியோக்களை வழங்கும் தளம் பற்றி இணைய உலகில் தெரியாதோர் இருக்கமுடியாது.அதை அப்படியே அடிச்சான் காப்பியாக இங்கே ஒரு சுவாசரஸ்ய தளம் உருவாக்கி இருக்கிறார்கள்.அது மணிடியூப்.காம் (Moneytube.com)



இதில் அங்கம் வகிப்போர் பணம் பண்ணலாமாம். எப்படி?.இதில் மெம்பராகி பின், பிற வீடியோ தளங்களிலுள்ள (உதாரணமாக YouTube™, Google Videos™, Break™ etc) சூடான வீடியோக்களுக்கு சுட்டி கொடுக்க வேண்டும்.அந்த சுட்டி வழி வரும் டாலர்கள் வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதி உங்களுக்கு பகுத்து வழங்கப்படுமாம்.

மணி-டியுப் இதுதான் அந்த தளம் சென்று பாருங்கள்.ஆனால் தற்போது அந்தத்தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.இந்தவருடம் ஏப்ரல் 12 ம்திகதிக்கு பின் தான் இயங்குமாம்.


இன்னொரு தளம் metacafe.com இத்தளத்தில் நீங்கள் ஏற்றும் வீடியோ 20,000 தடவை பார்வையிடப்பட்டால் $100 கிடைக்கும்.2 மில்லியன் தடவை பார்வையிடப்பட்டால் $10,000 கிடைக்கும்.

கூகிள் (Google) உருவான சுவாரஸ்யமான கதை

கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க" என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு. அதுமாதிரிதான் "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்ம்பிக்கிறோம் " என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள்.அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.

நீங்க நம்ப மாட்டிங்கன்னு தெரிஞ்சுதான் கூகிள் நிறுவனத்தோட உள்ளக படங்களையெல்லாம் இணைத்திருக்கிறேன். இது எவ்வளவு ஜாலியான கம்பனின்னு படங்களை பார்த்தாலே தெரியும்.

ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரிய Justify Fullஅமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார்.

இந்த நிலையில் பாஸ் என்ன செய்வார்?

வேறொரு கம்பெனியாக இருந்திருந்தால் உடனே ஷெலுக்கு சீட்டுக் கிழிவதுடன், அவருடைய சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசர் வரை அத்தனை பேருக்கும் அண்டர்வேருடன் நிறுத்தி வைத்து பரேடு நடந்திருக்கும். ஆனால் ஷெலின் பாஸ் புன்னகையுடன், ""அப்படியா, தாங்க்ஸ்!'' என்றார்.

""தயங்கித் தயங்கி, ஒரு முடிவும் எடுக்காமல் களிமண் மாதிரி உட்கார்ந்திருப்பவர்கள்தான் தப்பே செய்ய மாட்டார்கள். அடிக்கடி தடுக்கி விழுபவர்கள்தான் நம் கம்பெனிக்குத் தேவை. அவர்கள்தான் நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்!''

இந்த வித்தியாசமான கம்பெனிதான் கூகிள். அதன் வினோதமான முதலாளிதான் லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி ப்ன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!) எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள்.

லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள். பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.

கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர். ஒன்று போட்டு நூறு சைபர். எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள். ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

இதை உருவாக்கி முடித்ததும் இந்த தேடல் நுட்பத்தை Yahoo போன்ற பெரும் தலைகள் யாருக்காவது விற்கலாம் என முடிவெடுத்தனர்.வாங்க யாரும் இல்லாததால் 1998-ல் Google என்ற கம்பெனி உருவானது.1998 நவம்பரில்
தான் கூகிள் இணையதளம் முதலாக தலைக்காட்ட தொடங்கி யிருந்தது.ஆரம்பத்தில் பணம் ஒன்றும் அவ்வளவாய் சம்பாதிக்க இயலவில்லை.Sun-னும் IBM-மும் சில Sun Ultra II,F50 IBM RS/6000
செர்வர்களை தானமாக வழங்கியிருந்தனர்.2001-ல் யாகூ கூகிளை வாங்க விலைப்பேசி கொண்டிருந்ததாம்.தேடல் இயந்திரத்தின் வலிமை அறியா யாகூ ஒரு தேடல் இயந்திரத்துக்கு இத்தனை விலையா ($5 Billion) என ஒதுங்கி விட்டது.(அன்று யாகுவிடம் விலைபோயிருந்தால் கூகிள் என்னவாயிருக்கும்?...யூகிக்க கூட இயலவில்லை.)

நிறுவனத்தில் எட்டாயிரம் பேர் வேலை செய்கிறார்கள். எல்லாம் பொறுக்கி எடுத்த மணி மணியான என்ஜினீயர்கள். அவர்களுடைய கலிபோர்னியா ஆபீசில் போய்ப் பார்த்தால் ஏதோ பல்கலைக்கழகக் கட்டடத்துக்குள் நுழைந்துவிட்ட மாதிதான் இருக்கிறது. இளைஞர் பட்டாளம் ஏக இரைச்சலாகச் சிரித்துக் கொண்டு அடித்துக் கொண்டு கானா பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறது. வராந்தாவில் ஊழியர்கள் வளர்க்கும் செல்ல நாய்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் டேபிள் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மடியில் குழந்தையை வைத்துக் கொண்டே வேலை செய்யும் தாய்மார்கள், மூடு வருவதற்காகப் பாட்டுக் கேட்கும், பியானோ வாசிக்கும் இளைஞர்கள்... ஆபீஸ் மாதிரியாகவா தெரிகிறது?

கூகிள் ஊழியர்களுக்கு கம்பெனி செலவில் சாப்பாடு, காப்பி இலவசம். கூகிள் கான்டீன் என்பது நம் மியூசிக் அகாதெமி கான்டீன் போல பிரபலமானது. அதைத் தவிர அலமாரி அலமாரியாக நொறுக்குத் தீனிகள், பழங்கள், பானங்கள். கொடுத்து வைத்தவர்கள், பிரித்து மேய்கிறார்கள்!

கூகிள் பிறந்த புதிதில் சர்ச் எஞ்சின் எனப்படும் வலைத் தேடல் இயந்திரமாக மட்டும்தான் இருந்தது. மசால் தோசை என்று தேடினால் இன்டர்நெட்டில் இருக்கும் கோடியோ கோடிக்கணக்கான தகவல் பக்கங்களில் புகுந்து புறப்பட்டுத் தேடி வினாடி நேரத்தில் விடை கொண்டு வந்துவிடும். இந்த மின்னல் வேகத் தேடல் டெக்னாலஜியைக் கண்டுபிடித்தவர்கள் பேஜும் பின்னும்தான். இதைச் செய்ய அவர்கள் பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் எதையும் உபயோகிக்கவில்லை; சாதாரணமாகக் கடையில் கிடைக்கும் எட்டணா கம்ப்யூட்டர்களை ஏராளமான எண்ணிக்கையில் வாங்கிப் போட்டு அவற்றை ஒத்துழைக்க வைத்த சாப்ட்வேர் சாணக்கியத்தனம்தான் அவர்கள் செய்தது.














கூகிளில் வேலை செய்பவர்கள் எல்லோருக்கும் வாரம் நாலு நாள் ஆபீஸ் வேலை, ஒரு நாள் சொந்த வேலை. அதாவது, உங்களுக்கு ஏதாவது புது ஐடியா தோன்றினால் அதை முயற்சித்துப் பார்க்க கம்பெனி காசில் வசதி செய்து தருகிறார்கள். கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள பல புதுமையான சேவைகள் இப்படி ஆளாளுக்கு குருட்டாம்போக்கில் யோசித்து ஆரம்பித்து வைத்ததுதான். ""ஒவ்வோர் ஐடியாவும் ஒரு வைரம்; "தினப்படி வேலையில் பிசியாக இருக்கிறேன், யோசிக்க நேரமில்லை' என்பதனால் எந்த நல்ல ஐடியாவும் வீணாகிவிடக் கூடாது'' என்பது கூகிள் கொள்கை.

கூகிள் ஊழியர்கள் எல்லாரும் கிட்டத்தட்ட சுதந்திரமாக, தமக்குத் தாமே வேலை செய்துகொள்கிறார்கள். பின்கை கட்டிக் கொண்டு பின்பக்கம் உலாத்திக் கண்காணித்துக் கொண்டே இருக்கும் சூப்பர்வைசர்கள் கிடையாது. ""எவ்வளவுக்கு எவ்வளவு மானேஜ்மென்ட் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் குறைந்துடும். ஃப்ரீயாக விட்டால்தான் எல்லாரும் பொறுப்பாக வேலை செய்வார்கள்'' என்கிறார்கள். (கார்ப்பரேட் சர்வாதிகாரிகளே! கவனித்தீர்களா?)

கூகிள் வருவதற்கு முன்னும் பற்பல தேடல் இயந்திரங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் எல்லாம் ஒரே குறைபாடு, குப்பைத் தொட்டியிலிருந்து அள்ளி வந்த மாதிரி சம்பந்தா சம்பந்தமில்லாத வலைப் பக்கங்களையெல்லாம் பீறாய்ந்து கொண்டுவந்து போட்டுவிடும். தங்கள் வெப் சைட்தான் முதலில் வர வேண்டும் என்பதற்காக சர்ச் எஞ்சினை நயவஞ்சகமாக ஏமாற்றுவதற்குப் பலர் சதித் திட்டங்கள் வேறு செய்து வைத்திருந்தார்கள்.

கூகிள்தான் முதல் முதலாக பக்கங்களைத் தரப்படுத்தி மார்க் போட்டு உருப்படியான தகவல்களை முதலில் கொண்டு வந்து தர ஆரம்பித்தது. பேஜ் ராங்கிங் (Page ranking) என்ற இந்த டெக்னிக்கை கண்டுபிடித்தவர் லாரி பேஜ். ஒரு வலைப் பக்கத்தை நிறையப் பேர் சிபாரிசு செய்து இணைப்புச் சங்கிலி போட்டு வைத்திருந்தால், அதிலும் பெரிய மனிதர்கள் சிபாரிசு செய்தால் அதிக மார்க் என்பது இதன் தத்துவம். கூகிளையும் ஏமாற்ற முடியும்; ஆனால் கஷ்டம்.

கூகிள் ஆராய்ச்சிசாலை என்று புதிது புதிதாக என்னவோ கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

கூகிள் நியூஸ் என்பது உலகத்தில் உள்ள அத்தனை செய்திகளையும் ஒரே இடத்தில் தருகிறது;

கூகிள் மேப் என்ற சேவையில் அமெரிக்காவின் வரைபடம் மொத்தமும் வைத்திருக்கிறார்கள். ஏதாவது ஓர் ஏரியாவில் போய் நின்றுகொண்டு இங்கே பக்கத்தில் பிட்ஸா எங்கே கிடைக்கும் என்றால் உடனே காட்டுகிறது.

லட்சக்கணக்கான புத்தகங்கள் கொண்ட இலவச லைப்ரரி நடத்துகிறார்கள்.

பி.எச்டி மாணவர்கள் காப்பி அடிக்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் தேடித் தருகிறார்கள்.

பறவைப் பார்வையாக சாட்டிலைட்டிலிருந்து உலகத்தைப் பார்க்கவும் வசதி செய்திருக்கிறார்கள் (ஊரான் வீட்டு நெய்யே என்று இந்தியாவின் தலைப்பக்கம் கொஞ்சம் கிள்ளி பாகிஸ்தானுக்குக் கொடுத்திருப்பதுதான் பார்க்கச் சகிக்கவில்லை.)

கூகிள் பயண சேவையில் பஸ், ரயில் நேரங்கள், வழித் தடங்கள் சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட ஸ்டாப்பில் அடுத்த பஸ் எப்போது வரும் என்பது வரை காட்டுகிறது (ஆழ்வார்பேட்டையில் அல்ல, அமெரிக்காவில்!). கூகிள் செவ்வாய் என்ற ப்ராஜெக்டில் செவ்வாய் கிரகத்தின் நுணுக்கமான போட்டோக்களை கலர் கலராக சேமித்து வைத்திருக்கிறார்கள்.

உங்களுக்கே சொந்தமாக இணையத்தில் ஓர் ஒண்டுக் குடித்தனம்- ஒரு வலைப் பக்கம் தேவை என்றால் ஐந்து நிமிடத்தில் அமைத்துக்கொள்ளலாம். டைப் அடிக்கத் தெரிந்தால் போதும்; மற்றதெல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்.

ஜி மெயில்தான் இப்போது சூடான மெயிலை விட அதிகம் நாடப்படுகிறது. எல்லா இ-மெயில் கம்பெனிகளும் பிசுகிப் பிசுகி ஐம்பது மெகாபைட், நூறு மெகாபைட் என்று இடம் தந்துகொண்டிருந்தபோது கூகிள் மட்டும் ஒரேயடியாக ஆயிரம் எம்.பி. இலவசம் என்று அறிவித்துப் போட்டியாளர்களைப் பதறி ஓட வைத்தார்கள். பிறகு இது இரண்டாயிரத்தைத் தாண்டி இலவசமாக இன்னும் வளர்ந்துகொண்டே போகிறது.

இன்டர்நெட் பூராவும் அநியாயத்துக்குக் கொட்டிக் கிடக்கும் மற்றொரு விஷயம் செக்ஸ். குழந்தைகள் கூகிளில் தேடும்போது பலான சமாச்சாரங்கள் எதுவும் வந்துவிடக் கூடாதே என்பதற்காக முக்கியமான வார்த்தைகளை வைத்து மேற்படி சரக்கா என்பதை நிர்ணயித்து வடிகட்டி விடுகிறார்கள். ஆனால் படங்களைப் பொறுத்தவரை கம்ப்யூட்டருக்கு கண்ணில்லை. ஒரு படத்தைக் காட்டி பக்திப் படமா, பலான படமா என்று கம்ப்யூட்டரை சரியாகச் சொல்ல வைத்துவிட்டால் கேள்வி கேட்காமல் டாக்டர் பட்டம் கொடுக்கலாம். சில கூகிள் விஞ்ஞானிகள் சேர்ந்து இதற்கு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.

மனித வடிவம், தோல் நிறம் எல்லாவற்றையும் எண்களாக மாற்றி ஸ்டாடிஸ்டிக்ஸ் கணக்குப் போட்டு படத்திலிருப்பது சம்திங் சம்திங்தான் என்பதை பெரும்பாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள்.

எந்த வார்த்தையை எந்த ஊர் ஜனங்கள் அதிகம் தேடுகிறார்கள் என்று தேதி வாரியாகப் படம் வரைந்து காட்டுகிறார்கள்.

அப்துல் கலாம் என்ற பெயரை கோவை மக்கள்தான் அதிகம் தேடுகிறார்கள்.

ஷகீலாவை கேரளத்து ரசிகர்கள் கூகிள் பூராத் தேடித் துரத்தியிருக்கிறார்கள்.

இந்தியாவின் டாப் டென் என்று பார்த்தால் பொதுவாக நாம் கிரிக்கெட் பற்றித்தான் அதிகம் விசாரித்திருக்கிறோம். அடுத்தபடி சானியா மிர்ஸா, ப்ரியங்கா சோப்ரா, நமீதா வருகிறார்கள்.

சில படிக்கிற பையன்கள் இந்திரா காந்தி யுனிவர்சிட்டியையும் தேடியிருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான x86 செர்வர்களில் தாங்களே உருவாக்கியுள்ள Linux-ல் தாங்களே உருவாக்கிய வெப்செர்வரில் எல்லாவற்றையும் ஓட்டுகிறார்கள்.அவர்கள் வெப் செர்வர் பெயர் GWS/2.1 அதாவது Google Web Server, current Version 2.1.அதாவது Apache-ன் கூகிள் வடிவம் என்கிறார்கள்.

கூகிள் செர்வர்கள் 450,000-ஐயும் ஓட்ட 20 மெகாவாட்டுகள் மின்சாரம் தேவையாம்.அதாவது மாதம் கூகிளுக்கு கரண்ட் பில் $2 மில்லியன்கள்.அம்மாடியோவ்!!!